உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜெயந்தி விழா

திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜெயந்தி விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், ஹோமம், அலங்காரம், மகாதீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். மூலவர் சிறப்பு அலங்காரத்தில், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்சவாகனத்தில், வான வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இல் பக்தர்கள் மற்றும் ஆரிய வைசிய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !