உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நவபாஷாணம்; தெளிவாக தெரிந்த நவக்கிரகம்

கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நவபாஷாணம்; தெளிவாக தெரிந்த நவக்கிரகம்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் நீர் உள்வாங்கியதால் நவக்கிரகங்கள் அனைத்தும் வெளியில் தெளிவாக தெரிந்த நிலையிலும், பக்தர்கள் வருகை இன்றி நவபாஷாணம் வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவக்கிரகம் அமைந்துள்ள பகுதியில், கடந்த சில நாட்களாக கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டதால், நவபாசானத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாலையில் கடல் நீர் உள்ளிழுக்கப்பட்டு, மாலை 3:00மணிக்கு மேல், கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. இந்த நேரங்களில் கடல் நீரில் வழக்கமாக மூழ்கி இருக்கும் நவக்கிரகங்கள் அனைத்தும், தண்ணீர் இன்றி தெளிவாக வெளியில் தெரிந்தன. இதனால், வருகை தந்த பக்தர்கள் அனைத்து நவக்கிரங்களையும் தெளிவாக பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக கிழக்கு கடல் பகுதி அவ்வப்போது, காலையில் உள்வாங்குவதும், மாலையில் கடல் இயல்பு நிலைக்கு வருவதும், வழக்கமான நிகழ்வாக உள்ளது. இது வழக்கமான நிகழ்வு என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !