சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி ஹோமம்
ADDED :925 days ago
சூலூர்; உலக நன்மை வேண்டி, குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் சிறப்பு ஹோமம் நடந்தது. உலக மக்களின் நன்மைக்காகவும், தடையில்லாத மழை வேண்டியும் குமாரபாளையம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வெங்கடாஜலபதி பெருமான் முன்பு குண்டம் அமைக்கப்பட்டு, பல்வேறு மூலிகைகள், திரவியங்களை கொண்டு ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி மற்றும் அர்ச்சனை நடந்தது. பழ வகைகள், பட்சணங்கள் பெருமானுக்கு படைக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.