பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக அபிஷேகம்
ADDED :1007 days ago
கோவை ; சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் புஷ்ப அலங்காரத்தில் உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.