நெல்லை டவுன் நரசிம்ம பெருமாள் கோயிலில் பாலாலய பூஜை
ADDED :916 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் மேலமாடவீதி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் பாலாலய பூஜைகள் நடந்தது. பாலாலய பூஜைகளை முன்னிட்டு கும்ப ஆவாஹனம், அக்னி பிரார்த்தனை, வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், கலச பூஜை, ரக்சா பந்தன், சோடச தீபாராதனை, கோஷ்டி நடந்தது. நரசிம்ம ஜெயந்தி உற்சவமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.