உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினெட்டாங்குடி அக்கினி வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பதினெட்டாங்குடி அக்கினி வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மேலூர்: பதினெட்டாங்குடியில் அக்கினி வீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 5 யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் தட்சினாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கீழ பதினெட்டாங்குடி, மேல பதினெட்டாங்குடி, மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !