உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவனி வந்த வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

பவனி வந்த வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

மீஞ்சூர்: மீஞ்சூர் அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த மாதம், 31ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், நாகவாகனம் என தினமும் உற்சவங்கள் சிறப்பாக நடந்தன.பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான நேற்று, தேர்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் உற்சவ பெருமான், 43 அடி மரத்தேரில் வீற்றிருந்தார். வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேர், காலை 8:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்டது.பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடனும், ஆரவாரத்துடனும் தேரின் வடம்பிடித்து இழுத்தனர். வரதராஜ பெருமாள் மாடவீதிகள் வழியாக தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 3:00மணிக்கு வீதி உலா முடிந்து தேர் நிலைக்கு திரும்பியது. மின் வாரியம், காவல், தீயணைப்புத் துறையினர் தேர் சென்ற மாடவீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !