காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :854 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக குண்டூர் மாவட்டம் விசாக நகர் பகுதியை சேர்ந்த மல்லேஸ்வரராவ் என்பவரது மகன் பவன் குமார் மற்றும் பூர்ணிமா சௌபாக்ய லஷ்மி பெயரில் குடும்பத்தினர் ஆகியோர் 3 லட்சத்து 26 ஆயிரத்து 254 ரூபாய் நன்கொடையாக ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலுவிடம் நன்கொடையாக வழங்கினர். இவர்களுக்கு முன்னதாக கோயில் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.