நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோயிலில் கிருத்திகை பூஜை
ADDED :856 days ago
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் உள்ள ராஜா சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. நேற்று வைகாசி மாத கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.