உள்ளூர் செய்திகள்

மறுமை நாள்


* மறுமை நாள் வந்தே தீரும். அதில் சந்தேகம் இல்லை.
* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
* ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
* பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள்.
* கொடுமையையும், அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு.
* அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில், சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர்.
* அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம்.
* கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள்.  
* தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான்.   
* பதவியில் இருக்கும்போது, உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள்.
* மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !