ஆனந்தசாயி கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :1078 days ago
உடுமலை : உடுமலை, தில்லைநகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 10ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 108 வலம்புரி சங்காபிஷேகத்திற்க்காக அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தசாயி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.