உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிராவட்டி கருப்பு கோயில் கும்பாபிஷேகம்

சிராவட்டி கருப்பு கோயில் கும்பாபிஷேகம்

மேலுார்: எம்.மலம்பட்டியில் சிராவட்டி கருப்பு கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 2 யாகசாலை பூஜைகள் துவங்கியது. மூன்றாம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் தட்சினாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மலம்பட்டி, மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு இக் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !