கொடை குறிஞ்சியாண்டவர் கோயிலில் பவுர்ணமி விழா
ADDED :1147 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த குறிஞ்சி ஆண்டவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.