அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில் செடல் திருவிழா
ADDED :893 days ago
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் முத்தால் வாழியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. விழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், மாலை அம்மன் வீதியுலாவும் நடந்தது. கடந்த 7ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். நேற்று செடல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை 11:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி, அம்மனுக்கு செடல் அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.