உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி பிரதோஷ வழிபாட்டிற்காக  ஏராளமான பக்தர்கள் குவி்ந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலை கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று ஜூலை 15 முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதனை முன்னிட்டு தானிப்பாறை மலை அடிவார தோப்புகளில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகள் இன்று நடைபெற்று வருகிறது. மலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் வனத்துறை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !