பிரம்மோற்சவ விழா: அருணாசலேசுவரர் கோவிலில் திருவூடல் நிகழ்ச்சி
ADDED :781 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளில் சிவகாமி அம்மன் சமேதராய் சின்ன நடராஜர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கோவில் மகிழமரம் முன் திருவூடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். முன்னதாக கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.