உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி பௌர்ணமி, ஆடிச்செவ்வாய்; கோவிலில் குவிந்த பக்தர்கள்.. அம்மன், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி பௌர்ணமி, ஆடிச்செவ்வாய்; கோவிலில் குவிந்த பக்தர்கள்.. அம்மன், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாய், பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள மூலவர் அம்மன் மற்றும் பாலமுருகனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் அம்மன் மற்றும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !