கணவாய் கருப்பணசாமி கோயிலில் வாடகை கார்களுக்கு பூஜை; கிடாய் வெட்டி அன்னதானம்
ADDED :804 days ago
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசாமி கோயிலில் புதிய வாகனங்கள் வாங்குபவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்களுக்கு சிதறு தேங்காய் உடைத்து பூஜை செய்வதும், ஆடி மாதத்தில் கிடாய்கள் வெட்டி பூஜை செய்வதும் வழக்கம்.
இதே போல் இந்தாண்டு கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை கார்கள் வைத்திருப்போர் 50க்கும் மேற்பட்ட கார்களுடன் கணவாய் கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து கார்களுக்கு மாலைகள் மற்றும் சந்தனம் பூசி விட்டு கிடாய்கள் வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். லாபகரமாக தங்களது வாகனங்கள் இயங்க பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதான விழாவில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.