உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பூஜை

உலக நன்மை வேண்டி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பூஜை

கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக நன்மை வேண்டி நடந்த பௌர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த சபை சார்பாக சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமையில் உலக மக்களின் நலன் வேண்டி ஆடி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. இதையொட்டி குபேர பூஜை, நவகிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்பாக காலையில் கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு பவுர்ணமி கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !