உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் திறப்பு

சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன.

இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை பூஜாரிகள் முன்னிலையில் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. மகளிர் சுய உதவி குழு பெண்கள் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக ரூ 5367824, தங்கம் ரூ 174. 800 கிராம், வெள்ளி 528 கிராம் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை பொருட்கள் கோயில் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியல் திறப்பை முன்னிட்டு கோயில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !