உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சுதர்ஷன ஹோமம்

சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சுதர்ஷன ஹோமம்

இந்திரா நகர்: இந்திரா நகர் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், நாளை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ சுதர்ஷன ஹோமம் நடத்தப்படுகிறது.


ஸ்ரீலட்சுமி சுதர்ஷன ஹோமம் செய்வதால், மாணவர்களுக்கு கல்வி, அறிவு, ஞானம், நினைவாற்றல் சிறந்து விளங்கும். எதிரிகள் பயம் நீங்கி, தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு பெற்று, காரிய வெற்றி, சுபிட்சம் அடையலாம். இதனால், மன அமைதி, ஆரோக்கியம், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் சிறப்பு வழிபாடு இது. இத்தகைய ஹோமம், பெங்களூரு இந்திரா நகர், 100 அடி சாலையில் உள்ள ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், நாளை நடக்கிறது. அன்று காலை 9:00 முதல் 10:00 மணி வரை ஸ்ரீலட்சுமி ஹயக்கீரவ சுதர்ஷன ஹோமமும், சங்கல்பமும் நடக்கிறது. மதியம், 12:30 முதல் 1:00 மணி வரை பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 95381 48661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !