உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரில் வலம் வந்து அருள்பாலித்த காளஹஸ்தி, விஞ்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி

தேரில் வலம் வந்து அருள்பாலித்த காளஹஸ்தி, விஞ்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன விஞ்ஞான மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தேவையானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி சுவாமி தேரில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம், மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கோயிலில் இருந்து ராஜகோபுரம் வழியாக தேரில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தன. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !