தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் மண்டல பூஜை; சுவாமிக்கு அபிஷேகம்
ADDED :783 days ago
தாண்டிக்குடி; தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை நடந்தது. இக்கோயிலில் ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன. 48 வது நாள் மண்டல பூஜையில் சிறப்பு ஹோமம் மற்றும் வேள்வி பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.