உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரலட்சுமி பூஜை : 50001 வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்

வரலட்சுமி பூஜை : 50001 வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயார்

போடி: வரலட்சுமி பூஜையை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் 50001 வளையல் அலங்காரத்தில் பத்மாவதி தயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.

* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் ஐம்பொன் கவச அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன.

* தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு விளக்கு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.

* போடி குலாலர்பாளையம் கல்கத்தா காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.

* போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !