ஆவணி சோமவாரம்; வேதபுரீஸ்வரர் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :875 days ago
கோவை; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடிஸ் வீதி, கருமாரி அம்மன் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் கோயிலில் உள்ள வேதபுரீஸ்வரர் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.