சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
ADDED :1066 days ago
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று லட்சார்ச்சனை துவங்கியது. காலையில் மூலவர்முன்பு மூஞ்சுறு வாகனத்தில் பித்தளை குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜை நடந்தது. இந்த லட்சார்ச்சனை செப். 17வரை உபயதாரர்கள்மூலம் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 18 காலை மஹாகணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளிக்கவசம் சாத்துப்படி ஆகிறது. மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் வீதி உலா நிகழ்ச்சியை நடைபெறும்.