கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் போலா பண்டிகை; நாக்பூரில் கோலாகலம்
ADDED :855 days ago
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், போலா என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தீய சக்திகளின் உருவ பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று தீ வைத்து எரிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.