பரதன்தாங்கல் மகா சக்தி மாரியம்மன் கோவில் பவுர்ணமி வழிபாடு
ADDED :1048 days ago
செஞ்சி, பரதன்தாங்கல் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சி அடுத்த பரதன்தாங்கல் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் இன்று பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.