உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி; கம்பீர மாருதி அலங்காரத்தில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்; பக்தர்கள் பரவசம்

புரட்டாசி சனி; கம்பீர மாருதி அலங்காரத்தில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்; பக்தர்கள் பரவசம்

சின்னாளபட்டி: புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் கம்பீர மாருதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில், புரட்டாசி சனி வார சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !