உளுந்தூர்பேட்டை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :813 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது.
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் தீபாவார்தன வழிபாடுகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா வெள்ளையூர் ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வரதராஜ நாராயண பெருமாள் கோவில், எலவனாசூர்கோட்டை ஸ்ரீ ராஜநாராயண பெருமாள் கோவில், பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது.