உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

செஞ்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

செஞ்சி; செஞ்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

செஞ்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர். சிறப்பு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினர். செஞ்சி கோட்டை வெங்கட்ராமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !