புரட்டாசி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :872 days ago
கோவை ; நேரு ஸ்டேடியம் அருகே உள்ளஆடிஸ் வீதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வேதபுரீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.