சயன கோலத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :1032 days ago
கோவை; குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ஸ்ரீரங்கம் சயன பெருமாள் திருக்கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.