உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலா கடல் அலையா.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. இன்று மாலை சூரபத்மனை வதம் செய்கிறார் சுவாமி

கடலா கடல் அலையா.. திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்.. இன்று மாலை சூரபத்மனை வதம் செய்கிறார் சுவாமி

துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, 13ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.,18) மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.

இதையொட்டி, அதிகாலை, 1:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9:00 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. யாகசாலையில் தீபாராதனைக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு மஹா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றனர். அங்கு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு, கடற்கரையில் சூரபத்மனை, சுவாமி வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை இரவில் திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !