உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயிலில் நாளை பகல் பத்து உற்சவம் ஆரம்பம்

பரமக்குடி பெருமாள் கோயிலில் நாளை பகல் பத்து உற்சவம் ஆரம்பம்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் (டிச. 13) நாளை துவங்குகிறது.

பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசி விழா விமரிசையாக நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை தொடங்கி பகல் பத்து உற்சவம் துவங்க உள்ளது. இதன்படி தினமும் காலை 10:00 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் சவுந்தரவல்லி தாயார் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்படும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்து பிரசாரங்கள் வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி டிச., 22 மாலை பெருமாள் மோகினி அவதாரத்துடன் வலம் வருகிறார். பின்னர் மாலை 6:00 மணிக்கு நடை சாற்றப்படும். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து அன்று இரவு முதல் ராப்பத்து நிகழ்ச்சிகள் துவங்க உள்ளது‌. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !