உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பூஜை

வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பூஜை

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருவோண பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர்,சந்தனம்,இளநீர்,தேன்,தயிர்,மஞ்சள், திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு,அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் உற்சவர் சுவாமிகள் கோவில் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.அங்கு சுவாமிகளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திருவோண பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !