உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :718 days ago
கோவை; உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் நெய் மற்றும் எண்ணெய் தீபம் ஏற்றி லட்சுமி நரசிம்மரை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.