உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்.. முன்னோரை வழிபட்டனர்

தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்.. முன்னோரை வழிபட்டனர்

ராமேஸ்வரம்; தை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தை அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். இதன்பின் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் சிவசிவ என கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். இதன்பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள்.பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 11 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு மகா தீபாரதனை நடந்ததும், பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்கும், உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !