உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு வழிபாடு; சுவாமிக்கு அபிஷேகம்

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு வழிபாடு; சுவாமிக்கு அபிஷேகம்

திருவாரூர்: விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பதஞ்சலி மனோகரர் கோயிலில், நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள், பஞ்சகவ்யம்,  பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ  அலங்காரத்தில்  அருள்பாலித்தார்.  பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சந்திரசேகர சிவாச்சாரியார் பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !