உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபுதாபியில் அற்புத முதல் இந்து கோயில்; நாளை மறுதினம் திறக்கிறார் பிரதமர் மோடி

அபுதாபியில் அற்புத முதல் இந்து கோயில்; நாளை மறுதினம் திறக்கிறார் பிரதமர் மோடி

அபுதாபி; அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை பிரதமர் மோடி வரும் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இக்கோவிலுக்கு 402 வெள்ளை பளிங்கு தூண்களை செதுக்கியுள்ளனர். இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இக்கோயில் கட்டுமான பணிகள் முடிந்துள்ளது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை மறுதினம் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.  இந்து ஆன்மீகத் தலைவரான மஹந்த் சுவாமி மகராஜ், இந்த கோவிலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான விழா அபுதாபியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !