மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
578 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
578 days ago
சென்னை; தி.நகர்., பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் கஜ வாகனத்தில் நான்கு மாட வீதிகளையும் தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மவதி தாயார் கோவிலில் ஒன்பது நாள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம்,27ம் தேதி குங்கும அர்ச்சனை நடந்தது. பிரம்மோற்சவ துவக்க நாளான கடந்த மாதம் 28ம் தேதி துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடந்தது. நேற்று காலை பல்லக்கு உற்சவ புறப்பாடு நடந்தது. இதையடுத்து, மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதனை தொடர்ந்து கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு பத்மாவதி தாயார் கஜவாகனத்தில் எழுந்தருளினார். கஜ வாகன புறப்பாட்டை முன்னிட்டு, திருமலையில் உள்ளது போல, கோலாட்டம், பரதநாட்டியம், பாரம்பரிய நடன நிகழ்சிகளுடன் பிரபந்த கோஷ்டியினர் முன் சென்றனர். அதனை தொடர்ந்து கோவிலில் இருந்து நேற்று இரவு வாகன புறப்பாடு துவங்கியது. ஜி.என்.செட்டி சாலை, ஏ.ஜி.எஸ்., தியேட்டர் அடுத்த வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, டாக்டர் நாயர் சாலை வழியாக மாடவீதிகளை கஜ வாகனத்தில் வலம் வந்த தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். ஒவ்வொரு தெரு முனையிலும் வாகனம் நிற்றும் போது பக்தர்கள் ஆரத்தி தட்டுடன் வந்து தீபாராதனை செய்துக் கொண்டனர். பக்தர்கள் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த வைபத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கஜ வாகன புறப்பாட்டை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார். இன்று காலை சர்வ பூபால வாகன புறப்பாடும், மாலை கருட வாகன சேவையும் நடக்கிறது. 6ம் தேதி ரத உற்சவமும், 7ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்கிறது.
578 days ago
578 days ago