உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தி கோஷம்.. சிவ வாத்தியம் இசைத்து பக்தர்கள் வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தி கோஷம்.. சிவ வாத்தியம் இசைத்து பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் கொடி மரத்தின் அருகில் உள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், பன்னீர், அரிசி பொடி, அபிஷேக பொடி, தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, விபூதி, இளநீர் மற்றும் பல்வேறு வாசனை  திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமச்சிவாய என பக்தி கோஷம் எழுப்பியும், சிவ வாத்தியங்கள் கொண்டு இசைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !