உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா; புஷ்ப யாகத்துடன் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா; புஷ்ப யாகத்துடன் நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா உற்ஸவம் புஷ்ப யாகத்துடன் நேற்று நிறைவடைந்தது.

இக்கோயிலில் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. மார்ச் 25 இரவு முக்கிய நிகழ்வான ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணம் நடந்தது. திருவிழா நிறைவு நாளான நேற்று மாலை 6:30 மணிக்கு புஷ்ப யாகம் துவங்கியது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வகை மலர்களால் பூக்கோலம் இடப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நேற்றுடன் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா உற்ஸவம் நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !