உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு அம்மன்: விருப்பம் நிறைவேற...

தினமும் ஒரு அம்மன்: விருப்பம் நிறைவேற...

விருப்பம் நிறைவேற புதுக்கோட்டை அரிய நாச்சியம்மனை தரிசிப்போம்.

மன்னரான குலோத்துங்க சோழன் புதுக்கோட்டையில் சிவன் கோயில்
ஒன்றை கட்டினார். அதன் அருகிலேயே அரியநாச்சி என்ற பெயரில் அம்மனுக்கும் கோயில் கட்டினார்.

சோழ மன்னர்களுடன் பாண்டியர், பல்லவ மன்னர்களும் இங்கு
திருப்பணி செய்துள்ளனர்.   

சாந்த முகத்துடன் காட்சி தரும் அரியநாச்சி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றினால் கிரக தோஷம் தீரும். அம்மனுக்கு தங்கம், வெள்ளியால் ஆன பொட்டு, திருமாங்கல்யம் அணிவித்தால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். அரளிமாலை சாத்தினால் செவ்வாய் தோஷம் தீரும்.  

திருமணம், குழந்தை வரம் கிடைக்க இங்குள்ள ஆலமரம், வேப்பமரத்தை சுற்றி வந்து மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். விருப்பம் நிறைவேற வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து தரிசிக்கின்றனர். ஆனி திருவிழாவில் அம்மனை பூப்பல்லக்கில் தரிசிப்பது விசேஷம்.

எப்படி செல்வது: புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அருகில்
நேரம்: காலை 6:00 – 10:00 மணி; மாலை 5:00 –  8:00 மணி
தொடர்புக்கு: 04322 – 221 084


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !