உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் பாண்டுரங்க பஜனோத்சவம்

கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் பாண்டுரங்க பஜனோத்சவம்

  கோவை: ஸ்ரீ நாமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில் நடந்து வந்த பண்டரீபுரம் பஜேபாண்டு ரங்கம் பஜனோத்ஸவம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

ஆக., 13ல் ராம்நகர் பஜனை கோஷ்டியரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இசை கலைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன

நேற்று காலை 9 முதல் 1 மணி வரை சுந்தர் பாகவதர் மற்றும் குழுவினரின் ஸ்ரீ ருக்மணி கல்யாண மஹோத்ஸவமும், ஸ்ரீ பிரகாஷ் பாகவதரின் அபிநய நிகழ்ச்சியும் நடந்தது.

மதியம் 3 மணிக்கு ஸ்ரீஸ்ரீநாத் மஹாராஜ் மற்றும் குழுவினரின் அபங்க நாமசங்கீர்த்தனமும், மாலை 6 மணிக்கு ஸ்ரீ கவுதம் கண்ணன் குழுவினரின் வசந்தோற்சவம் மற்றும் பவ்வளிம்பு நிகழ்ச்சியும், ஸ்ரீ பிரகாஷ் பாகவதரின் ஆஞ்சநேயர் உற்சவத்தோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. பார்வையாளர்கள் கைதட்டி ரசித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ நாமசங்கீர்த்தனா டிரஸ்ட் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !