தினமும் ஒரு அம்மன்: கண்ணீரை துடைப்பவள்
பிரச்னையால் கண்ணீர் சிந்துகிறீர்களா... திருச்சி உறையூர் வெக்காளி
அம்மனை தரிசியுங்கள்.
திருச்சி உறையூரில் செவ்வந்திப்பூ தோட்டம் வைத்திருந்தார் சாரமாமுனிவர்.
ஒரு நாள் தோட்டத்தில் உள்ள அத்தனை பூக்களையும் பறித்த பிராந்தகன்
என்பவன், அதை அரண்மனைக்கு கொண்டு சென்றான். சிவபூஜைக்கு பூ இல்லாததால் கோபம் கொண்ட முனிவர் இங்குள்ள தாயுமான சுவாமியிடம் (சிவன்) முறையிட்டார்.
அவரோ முனிவருக்காக மணலை மழையாக பெய்யச் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காளியிடம் சரணடைந்தனர். உடனே காளி வெட்டவெளியில் தோன்றி மக்களை காப்பாற்றினாள். அவளே இக்கோயிலில் தீ ஜுவாலை கிரீடம் தாங்கி கோபமாக இருக்கிறாள்.கையில் உடுக்கை, சூலம் உள்ளது.
அம்மனின் கால் அசுரனை மிதித்தபடி உள்ளது. பணம், பதவி, அதிகாரத்தில் உள்ளவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் தர்மத்தை நிலைநாட்டுகிறாள் வெக்காளி.
எப்படி செல்வது: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 0431 – 276 1869