உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் ஒரு மாதம் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா, கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில் கடந்த 5ம் தேதி துவங்கியது. ஆழ்வார்பேட்டை கோதண்டராமர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலம். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நடன குழுவினரின் துர்கா பரமேஸ்வரி நடனம் தத்ரூபமாக நடத்தப்பட்டது. தாரை தப்பட்டைகள் முழங்க பக்தர்கள் நடனமாடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து கொடியேற்றம், திருப்பூச்சாற்று, கரக ஊர்வலம் நடந்தது. காந்திபுரம், இந்திரா நகரில் இருந்து அரவை காவடி ஊர்வலத்துடன் அம்மன் பவனி நடந்தது. உபயதாரர்கள் சார்பில் திருத்தேர் ஊர்வலம் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !