ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்ஸவம் துவக்கம்
ADDED :548 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 6:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, சந்தன காப்பு சாற்றப்பட்டு, மலர் சட்டை அணிவிக்கப்பட்டு நீராழி மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். ஏப்ரல் 23 சித்ரா பவுர்ணமி வரை 10 நாட்கள் கோடை வசந்த உற்ஸவம் நடக்கிறது.