உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம்

சித்திரை திருவோணம்; நடராஜப் பெருமானுக்கு 32 வகை மஹா அபிஷேகம்

அவிநாசி; சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாள் உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

அவிநாசி அடுத்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. சித்திரையில் திருவோணம், ஆனியில் உத்திரம், மார்கழியில் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி உள்ளிட்ட மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதிகளிலும் மஹா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே நடைபெறும் மஹா அபிஷேக நிகழ்ச்சி நேற்று சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 32 திரவியங்களில் ஸ்ரீ நடராஜர் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் செண்பகப்பூ, தாமரை மாலை, வில்வமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !