/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் 74ம் ஆண்டு ஆராதனை விழா; கீர்த்தனைகள் பாடி வழிபட்ட இளையராஜா
திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் 74ம் ஆண்டு ஆராதனை விழா; கீர்த்தனைகள் பாடி வழிபட்ட இளையராஜா
ADDED :561 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில், 74 ஆம் ஆண்டு ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ரமண பகவான் சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ரமண பகவான் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்று ரமண பகவானின் கீர்த்தனைகளை பாடி வழிபட்டார்.